நாளைய தினம் 90வீத தனியார் பஸ்கள் இயக்கப்படும்: கெமுனு

Date:

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் 10,000 முதல் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹக்மன, தெனிய, திக்வெல்ல, ஹம்பாந்தோட்டை, மித்தெனிய, சூரியவௌ, திஸ்ஸமஹாராமய, பெலியஅத்த போன்ற பல கிராமப்புறங்களில் பேருந்துகளை இயக்குவது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக கெமுனு தெரிவித்தார்.

எரிபொருள் பெறுவதற்கு 40 கிலோமீற்றர் தூரம்  செல்ல வேண்டியிருப்பதால் இப்பகுதிகளுக்கு ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

‘மேல் மாகாணத்தில் பாடசாலை பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மற்ற பகுதிகளில், பாடசாலைகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் சாதாரண கட்டணத்தில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...