பல அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி

Date:

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய விமான சேவை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை தனியார் மயமாக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

‘தி எகனாமிஸ்ட்டுக்கு’ வழங்கிய நேர்காணலிலொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும், இலங்கை முதலீட்டுக்குத் திறந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், சில நிறுவனங்கள் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருவதால், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை சில அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களின் விரோதப் போக்கு குறித்து வினவியபோது, ​​தொழிற்சங்கங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மக்கள்தான் முக்கியம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நினைத்தால் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...