பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்: கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Date:

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பி.என்.எஸ்) தைமூர் இன்று (ஆகஸ்ட் 12) காலை முறைப்படி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகைத் தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

134 மீ. நீளம் கொண்ட இந்த கப்பலுக்கு கேப்டன் எம். யாசிர் தாஹிர் தலைமை தாங்குகிறார், மேலும் கப்பலின் துணையாக 169 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,  தைமூர் கப்பல்  கட்டளை அதிகாரி இன்று மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதியை சந்திக்க உள்ளார்.

மேலும், இந்த கப்பல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்தோடு இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

அதேநேரம், இந்தக் கப்பல்  ஆகஸ்ட் 15 ஆம் திகதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தான் கடற்படையின் ஒரே மாதிரியான போர்க்கப்பலான பி.என்.எஸ் துக்ரில் , 2021 டிசம்பர் 13 அன்று உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தது மற்றும் டிசம்பர் 16 அன்று மேற்கு கடற்கரையில் SLNS சிந்தூரலாவுடன் ஒரு வெற்றிகரமான கடற்படை பயிற்சியை நடத்தியது.

பிராந்திய கடற்படைகளுடனான இந்த வகையான கடற்படை பயிற்சிகள் ஒவ்வொரு பங்காளிக்கும் எதிர்காலத்தில் பொதுவான கடல்சார் சவால்களை மேம்படுத்தும் ஒத்துழைப்பின் மூலம் வெற்றிகொள்ள உதவும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. சீனாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் பாகிஸ்தான் தற்போது தனது போர்க் கப்பலை இலங்கை கடல் பகுதியில் நிறுத்தி உள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்களால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...