பாடசாலை சீருடைகள் சீனாவிலிருந்து இறக்குமதி: அமைச்சரவை அங்கீகாரம்

Date:

2023 ஆம் ஆண்டிற்கான பள்ளி சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சீருடைகள் 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவனைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசால் சீனக்குடியரசுக்கு விண்ணப்பிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணித் தேவையின் ஒரு பகுதியை இலவசமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சீனக்குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளுர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...