பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் உயர்வதற்கான அறிகுறிகள்!

Date:

முட்டை விலை உயர்வால் எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் முட்டை விலையை குறைக்க அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தலையிட்டால் பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும் பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நாட்டில் முட்டை விலையை 30, 35 ரூபாவிற்கு விற்க முடியும் எனினும், 60 ரூபாவிற்கு விற்கின்றார்கள். இது முட்டை மாபியா. இந்தியாவின் தமிழ்நாட்டில் முட்டையொன்றின் விலை 18 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.

எனவே அங்கிருந்து முட்டை இறக்குமதி செய்தாலும் விலை குறைந்த விலைக்கு விற்கமுடியும் எனவே இதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...