புதியு கூட்டமைப்பு உருவாக்கத் திட்டம்: மைத்திரிபால சிறிசேன!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி பீடத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றமையினால், தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தான் அதனை பொறுப்பேற்க தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தயார் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...