மண்ணெண்ணெய் விலை உயர்வு மீன்பிடி தொழிலுக்குப் பெரும் அடியாகும்: மீனவர் சம்மேளனம்

Date:

மண்ணெண்ணெய் விலையை சுமார் 290 வீதத்தால் உயர்த்தியமை மீன்பிடித் தொழிலுக்குப் பெரும் அடியாகும் என அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சம்மேளனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, இந்த தீர்மானத்தினால் சுமார் 16 இலட்சம் மீனவக் குடும்பங்களைச் சார்ந்துள்ளவர்கள் மற்றும் இந்நாட்டின் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு ஏற்ப மீன் விலை 3 மடங்கு அதிகரிக்கப்படும் என தேசிய மீனவர் சம்மேளனத்தின் கொழும்பு மாவட்ட செயலாளர் அசங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்திற் கொண்டு மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு, மின்சாரம் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலை அதிகரிப்பை விட மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை மண்ணெண்ணெய் விலை திருத்தம் பல வருடங்களுக்கு முன்னரே இடம்பெற்றிருக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டமையே பிரதான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், கடற்றொழில் மற்றும் பெருந்தோட்டங்களுக்குத் தேவையான மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...