வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஜனாதிபதி, வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார்: வஜிர

Date:

வறிய மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வரித் திருத்தங்களுடன் மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா குறித்து காலி மக்களுக்கு அறிவிக்கும் முகமாக நடைபெற்ற கூட்டத்தில் வஜிர அபிவர்தன இதனைத் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் திருத்த வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படுவதாகவும், வீதிகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அல்ல என்றும், உணவு, உடை இல்லாத மக்களுக்கு அரிசி, துணி வாங்குவதற்கான அமைப்பை உருவாக்குவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதாகவும் வஜிர தெரிவித்தார்.

மேலும், போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளின் தலைமுறை பிறக்கிறதுஇ அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகஇ, மக்களை அபிவிருத்தி செய்பவர்கள் ஜனாதிபதியின் வரி திருத்தங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, தவிக்கும் குழந்தைகளின் பசியை போக்குவார்கள் என நம்புகிறோம்.

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக கனவுகள் இருக்கலாம், ஆனால் இருபது மில்லியன் மக்களின் வாழ்க்கையை வாழ்வதற்கான திட்டமும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...