ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பல அவசரகாலச் சட்டங்களைத் திருத்தியுள்ளார்.
குறித்த விதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டு அதே குறியீட்டின் பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரை அவசர சட்டம் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.