இன்று நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள்!

Date:

இன்று (09) தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

மக்கள் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மக்கள் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்திற்கான சரியான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதியை வலியுறத்துவது இதன் நோக்கமாகும் என அதன் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...