இன்று முதல் தேசிய அடையாள இலக்கம் கொண்ட பிறப்புச் சான்றிதழ்

Date:

இலங்கையில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் இன்று (1) முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளடக்கப்படும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இரு திணைக்களங்களும் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பகட்ட முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிறப்புச் சான்றிதழைப் பெற்ற அனைத்து குடிமக்களும் 15 வயதை அடைந்து, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு, பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறைமைய வசதியாக இருக்கும். பிறந்தது முதல் ஒரே இலக்கத்தில் தகவல்களைப் பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் மக்களுக்கு இருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...