இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவ்வாறான இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இணைந்து நிற்கின்றது எனவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்த புதிய நிதி நன்கொடையின் மூலம், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியின் அளவு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...