இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை!

Date:

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்ததாகவும், இலங்கையின் நிதி நெருக்கடி எங்களை கவலையடையச் செய்துள்ளது எனவும் குறித்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, வெளிநாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட்டிற்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...