இலங்கை குறித்து பிரித்தானிய அரசின் முக்கிய தீர்மானம்!

Date:

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை பிரகடனத்தை அடுத்து மே மாதம் பயண ஆலோசனை பிரித்தானிய புதுப்பித்தது.

இந்நிலையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள பிரித்தானியா, பாதுகாப்பு நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது.

ஆகவே இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் தமது நாட்டவர்களை தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து தொடர்பாக உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...