உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை சீன தூதுவர் முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...