பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்காலத்தில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.