எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

Date:

உள்நாட்டு எரிவாயு விலையை திங்கட்கிழமை (8) முதல் கணிசமான அளவு குறைப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை அண்மையில் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், தற்போதைய விலை 4,910 ரூபாவாகக் காணப்படுகின்றது.

மேலும் மக்கள் உணரும் வகையில் விலை குறைக்கப்படும், புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய விலைச் சூத்திரத்தினால் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதேவேளை 20 நாட்களில் 22 இலட்சம்  எரிவாயு  சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக  கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...