ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இலவசமாக வழங்க ஏற்டபாடு!

Date:

தேசிய சமாதானப் பேரவை மற்றும் ரம்ய லங்கா அமைப்பு என்பன தற்போது கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டப்பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்டபாடுகள் செயற்பட்டு வருகின்றன.

இந்த வேலைத்திட்டம் கேகாலை, வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்துடன் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இலவசமாக வழங்கப்படும்.

இந்த ஐந்து மாவட்டங்களிலும் ஐந்து குழு பண்ணைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான நிலம் தற்காலிகமாக மதஸ்தலங்கள் மற்றும் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்களால் வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஆதரவை ரம்யா லங்கா அமைப்பு வழங்குவதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி DIRC யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் அந்தந்த பிரிவுகளின் பிரதேச செயலாளர்களின் ஆதரவைப் பெற்று இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்டபாடுகள் செயற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...