கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Date:

இலங்கை வந்துள்ள சூப்பர் டீசல் கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல் தொகை வங்கி நடவடிக்கைகளின் தாமதம் காரணமாக தரையிறக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மற்றொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ள நிலையில் நாளை காலை தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாமதமான எரிபொருள் விநியோகத்தை ஈடுகட்ட இரவு நேர விநியோகமும் இடம்பெறும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...