குழந்தையின் பசிக்கு உணவளிக்க பால் மா டப்பாவை திருடிய தந்தை கைது!

Date:

அளுத்கம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவர் தந்தை ஒருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்க பால் பவுடர் டப்பாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த  தந்தை பல்பொருள் அங்காடிக்கு சென்று பால் பவுடர் டப்பாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து சந்தேகநபரான தந்தையை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...