சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரும்:மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிககையிலே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் சில சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகளின் செயல்திறன் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், சமீபத்திய மின்சாரக் கட்டண உயர்வைச் சேர்த்த பிறகும், மொத்தப் பணவீக்கம் 65 சதவீதத்தைத் தாண்டாது என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதேவேளை இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஜானக எதிரிசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...