சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்!

Date:

இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்காக, குழந்தை பராமரிப்பு துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொடர்புடைய நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது

பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்காக தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நியதிகள் ஏற்கனவே மாகாண மட்டத்தில் நடைமுறையில் உள்ளதாகவும், ஆனால் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டல் எதுவும் இல்லை எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...