சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு!

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு  ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...