சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: அவசர நிலை பிரகடனம்!

Date:

கொளுத்தும் வெப்பநிலைக்கு மத்தியில் சீனா முதல் தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது.

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக  கடந்த சனிக்கிழமை அன்று பல மாகாணங்களில் நான்கு அடுக்கு எச்சரிக்கையான சிவப்பு நிற எச்சரிக்கையை சீனாவின் வானிலை மையம் விடுத்துள்ளது.

சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷான்சி, சிச்சுவான், சோங்கிங், ஹூபே, ஹுனான், அன்ஹுய், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...