ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கைதியாவார்: தயாசிறி

Date:

தற்போதைய ஆட்சி 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் வரை பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய உறுதிமொழியுடன், அவர் அந்தக்கட்சியின் கைதியாக றியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் மற்றும் சுதந்திரக்கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் நாட்டின் 22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொண்டு வராது.

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்காது, ஆனால் அவர்களை மேலும் மோசமாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘உத்தேச பல கட்சி அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் சாலை வரைபடம் குறித்து நாங்கள் இன்னும் இருட்டில் இருக்கிறோம்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தையில் உள்ளடங்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான 9 மற்றும் 11 விடயங்கள் அடங்கிய இரண்டு ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கும் எந்தவொரு நிர்வாகத்தையும் ஆதரிக்க சுதந்திரக் கட்சி தயாராக இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு புத்துயிரூட்டும் ஆணை ரணிலுக்கு இல்லை. இலங்கையில் உலகளாவிய சமூகம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் மத்தியில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப அரகலக்காரர்கள் மற்றும் முழு தேசமும் கோரியபடி விரைவில் புதிய அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு அமைப்பு மாற்றம் தேவை’ என்று தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...