ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு!

Date:

தொழிற்சங்கவாதியும் ஆசிரியர் சங்கத்தலைவருமான ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சிறிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஸ்டாலினை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஸ்டாலினிடம் கூறினார்.

மேலும், முறைமை மாற்றத்தை வலியுறுத்தும் அரகலய உறுப்பினர்களை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தில் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உள்ளது, அதில் உள்ள நல்ல அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.

இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்படுவார் என எதிர்கட்சியான ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...