தனியார் பேருந்துகளின் சேவை 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பஸ்கள் இன்று (26) இயங்காது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகள் டீசலில் இயக்கப்பட்டதாக தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இன்று டீசல் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளினால் இன்று 50 வீதமான பேருந்து ஓட்டங்கள் குறையும் சில நாட்களாக டீசல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வாரத்தில் தொடர்ச்சியான பேருந்து சேவையை வழங்குவதற்கு இந்த வார இறுதியில் போதுமான டீசல் இருப்புக்கள் பெறப்பட வேண்டும்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் சில டிப்போக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக சில தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...