தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்குமாறு வடிவேல் சுரேஷினால் கடிதம்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாக 3250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.

அதற்கமைய அமைச்சின் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் எச்.ஜி.வசந்த குணவர்தன தொழில் அமைச்சின் செயலாளர்  ஆர்.பி.ஏ விமலவீர தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோருக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் சுஜித் சஞ்சய பெரேரா சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்போதைய வாழ்க்கை பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேதனத்தை 3250 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக வடிவேல் சுரேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இக்கடிதத்தை ஏற்று உடனடியாக சம்பள நிர்ணய சபையினை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தனர்.

வழமை மாறாத சலுகைகள் உடனேயே வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதியாக இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...