நாளைய தினம் 90வீத தனியார் பஸ்கள் இயக்கப்படும்: கெமுனு

Date:

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் 10,000 முதல் 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹக்மன, தெனிய, திக்வெல்ல, ஹம்பாந்தோட்டை, மித்தெனிய, சூரியவௌ, திஸ்ஸமஹாராமய, பெலியஅத்த போன்ற பல கிராமப்புறங்களில் பேருந்துகளை இயக்குவது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக கெமுனு தெரிவித்தார்.

எரிபொருள் பெறுவதற்கு 40 கிலோமீற்றர் தூரம்  செல்ல வேண்டியிருப்பதால் இப்பகுதிகளுக்கு ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

‘மேல் மாகாணத்தில் பாடசாலை பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மற்ற பகுதிகளில், பாடசாலைகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் சாதாரண கட்டணத்தில் சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...