பயங்கரவாதத் தடைச் சட்ட உத்தரவில் ஜனாதிபதி கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்: ஐ.நா.அறிக்கையாளர்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேரி லோலர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வௌ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், அவ்வாறு செய்வது ஒரு இருண்ட நாளாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...