பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் உயர்வதற்கான அறிகுறிகள்!

Date:

முட்டை விலை உயர்வால் எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் முட்டை விலையை குறைக்க அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தலையிட்டால் பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும் பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நாட்டில் முட்டை விலையை 30, 35 ரூபாவிற்கு விற்க முடியும் எனினும், 60 ரூபாவிற்கு விற்கின்றார்கள். இது முட்டை மாபியா. இந்தியாவின் தமிழ்நாட்டில் முட்டையொன்றின் விலை 18 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.

எனவே அங்கிருந்து முட்டை இறக்குமதி செய்தாலும் விலை குறைந்த விலைக்கு விற்கமுடியும் எனவே இதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...