பாராளுமன்றத்தில் மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள விசேட கோரிக்கை!

Date:

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்திலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு, மேற்படி குழுவை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் யோசனை தெரிவித்தார்.

குறிப்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பல முன்னாள் எம்.பி.க்கள் இந்த எரிபொருளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் என கூறியுள்ளனர்.

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அவ்வாறான குழுவை அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், அதற்குத் தேவையான பூரண ஆதரவு வழங்கப்படும். அதை ஏற்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் மேலும் பல குழுக்களை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...