மலையக ரயில் சேவை வழமைக்கு!

Date:

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், இரவு நேர தபால் ரயில் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்து செய்யப்பட்ட ரயில்களுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பிச்செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணச் சீட்டுகளை பெற்றுக்கொண்ட ரயில் நிலையங்களிலேயே கட்டணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...