மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Date:

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் பஸ்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்களை அடையாளம் காண நடமாடும் பரிசோதனை அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணங்களை அறவிடும் சில பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகளிடம் அறவிடும் மேலதிக பணத்தை மீள செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...