மேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது விடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தில் 2022 ஜூன் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.