‘வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையை வழங்க வேண்டும்’ :டில்வின் சில்வா

Date:

ரணிலின் அரசாங்கம் நரகத்தின் இடைவெளியில் உள்ளது, அந்த நரக இடைவெளியை விரைவில் முடித்து விடுவோம் என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய வெளியேறி ரணில் வந்த பின்னர் போராட்டத்தில் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பொலிஸார் தடியடி நடத்த ஆரம்பித்துள்ளனர்.

அடக்குமுறை ஏவத் தொடங்கிவிட்டது. நீங்கள் நரகத்தின் இடைவெளியில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்த இடைவெளி நீண்ட காலம் நீடிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தைப் பார்த்து கதை கதையாக கூறுகின்றார். அதனால் பதில் இல்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வழி இல்லை. அதற்கு எந்த திட்டமும் இல்லை.

இந்த திருடர் கூட்டத்துடன், இந்த குற்றவாளிகளுடன், இந்த பிரச்சனைகளுடன், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்? நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், இந்தக் கேள்விகளுடன் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியுமா? எனவே ரணிலிடம் நேரடியாக சொல்ல தயாராகி வருகிறோம்.

இதேவேளை, பாராளுமன்றத்தை கலைத்து வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...