தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்களில் டெங்கு, கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகமாகப் பரவி வருவதால், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மருத்துவ உதவியை நாடவும் டாக்டர் சமரவீர மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.