வெளிநாட்டில் இருக்கும் மனைவியை அழைத்து வருமாறு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை!

Date:

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவிக்கு மிரட்டல் விடுத்த தந்தை ஒருவரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைத்து வரும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தந்தையின் ஆபத்தான செயலால் குழந்தை எப்படி மிகவும் பயந்துள்ளது என்பதை வீடியோ காட்டுகிறது.

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து குழந்தையை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

குழந்தை தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன், தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...