20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான போதைப்பொருள் விற்பனை செய்யவதற்கு தயாராகி வந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குடியிருப்பு தொகுதியின் மூன்றாவது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவரை சோதனைக்குட்படுத்திய போது சுமார் 83 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...