20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான போதைப்பொருள் விற்பனை செய்யவதற்கு தயாராகி வந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குடியிருப்பு தொகுதியின் மூன்றாவது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவரை சோதனைக்குட்படுத்திய போது சுமார் 83 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...