20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான போதைப்பொருள் விற்பனை செய்யவதற்கு தயாராகி வந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குடியிருப்பு தொகுதியின் மூன்றாவது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவரை சோதனைக்குட்படுத்திய போது சுமார் 83 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...