22 திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணையில்!

Date:

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெறவுள்ளது.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, எச்.டி.ஜே. குலதுங்க, பி.பி.தஹாநாயக்க மற்றும் ஒன்பது பிரஜைகள் இது தொடர்பான மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தினால் தற்போதைய அரசியலமைப்பிற்கு முன்வைக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சமர்ப்பிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

அதன் சில சரத்துக்கள் தற்போதைய அரசாங்க அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றுவது அவசியமானால், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமாறும் மனுக்கள் மேலும் கோரியுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...