6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசாங்கம்!

Date:

பல சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் மீது இலங்கை அரசால் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அந்த வர்த்தமானியின் பிரகாரம், பயங்கரவாதம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்படுகிறது.

அதன்படி 6 சர்வதேச  தமிழ்  அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்கள் மீது இலங்கை அரசு விதித்திருந்த தடை நீக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

01. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
02. குளோபல் தமிழ் மன்றம்
03. உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு
04. திராவிட ஈழ மக்கள் காங்கிரஸ்
05. கனடிய தமிழ் காங்கிரஸ்
06. பிரித்தானிய தமிழர் மன்றத்தின் மீதான தடை நீக்கப்படும்.

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இந்தத் தடை விதிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளின் 4(7) கட்டளையின்படி இது நீக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...