அரசு தலையிட்டால் பேக்கரி பொருட்களை குறைக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Date:

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  பேக்கரி உற்பத்திக்கு தேவையான முக்கிய பொருட்களான மா, சீனி, மாஜரின், முட்டை ஆகியவற்றின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பணின் விலைக்க முடியுமாக இருக்கும்  எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர் நாட்டில் கோதுமை மா மாபியாவும் இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், 200 ரூபாவிற்கு கோதுமை மா மாவியாவினால் 280 ரூபாவிற்கு பேக்கரி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் விலையும் அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்த போதிலும் சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் முட்டை கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால், 190 /= அதிக விலை கொண்ட 400 கிராம் பாணின் விலையை,  50/=  குறைக்கலாம்.

எனவே அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு ஆதரவளிக்காவிட்டால்  பேக்கரி பொருட்களை வாங்க வேண்டாம் எனவும்  கூறுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...