இன்று முதல் தேசிய அடையாள இலக்கம் கொண்ட பிறப்புச் சான்றிதழ்

Date:

இலங்கையில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் இன்று (1) முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளடக்கப்படும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இரு திணைக்களங்களும் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பகட்ட முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிறப்புச் சான்றிதழைப் பெற்ற அனைத்து குடிமக்களும் 15 வயதை அடைந்து, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு, பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறைமைய வசதியாக இருக்கும். பிறந்தது முதல் ஒரே இலக்கத்தில் தகவல்களைப் பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் மக்களுக்கு இருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...