இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவ்வாறான இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இணைந்து நிற்கின்றது எனவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்த புதிய நிதி நன்கொடையின் மூலம், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியின் அளவு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...