இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவ்வாறான இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இணைந்து நிற்கின்றது எனவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்த புதிய நிதி நன்கொடையின் மூலம், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியின் அளவு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...