இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: (படங்கள்)

Date:

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காசாவில் வீடுகளை தரை மட்டமாக்கியுள்ளதுடன் பாலஸ்தீனிய ரொக்கெட்டுகள் இரண்டாவது நாளாக தெற்கு இஸ்ரேலைக் குறிவைத்துள்ளது.

காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இரண்டு நாட்கள் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 203 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரில் உள்ள நான்கு குடியிருப்பு கட்டிடங்கள் மீது போர் விமானங்கள் நேரடியாக தாக்குதல்களை முடுக்கிவிட்டன. அனைத்து இடங்களும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று மற்றொரு விமானத் தாக்குதலில் ஒரு கார் அழிக்கப்பட்டதுடன் 75 வயதான பெண் கொல்லப்பட்டார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவரின் வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசின.

இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது.

இரு தரப்பினரும் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

உயரமான கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து புகை வெளியேறும் காட்சி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

இதில் மூத்த போராளி உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...