காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொவிட் உள்ளது!

Date:

இந்த நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 நோயாளிகளாக சுகாதாரத் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பரவி வரும் இந்நோயை தடுப்பதற்கு சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் இந்நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னைய நோய்த்தடுப்பு மருந்துகளினால் இந்நோய் பரவுவது ஓரளவு தடைபட்டிருந்த போதிலும், சமூகத்தில் மீண்டும் அதே அறிகுறிகளுடன் பலரை சந்திப்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.

இந்நோய் மேலும் பரவினால் சமூகக் கூட்டங்கள் நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...