சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் Peter Breuer, பிரதித் தலைவர் Masahiro Nozaki, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி Tubagus Feridhanusetyawan, ஆகியோருடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், நிரோஷன் பெரேரா மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...